Thursday, February 14, 2013

திருக்கண்டியூர்-- 5

 உரிய வன்யமன் வந்திட
...உடலை விட்டுயிர் ஏகுமுன்
வரிய தள்தனை ஆடையாய்
...வரித்து மேனியில் ஏற்றவன்
திரியு முப்புரம் தீயெழ
...சிரித்த வன்விடத் தால்களம்
கரிய வன்பதி கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....9

மங்க லாகிடும் பார்வையும்
...மறலி வந்திடு முன்னமே
வெங்க டம்தனில் ஆடுவான்
...விரிந்த தாழ்சடை கொண்டவன்
செங்கழல் மறை போற்றிடும்
...திங்கள் கொன்றை பாம்புடன்
கங்கை சூடரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....10

3 comments:

Thangamani said...

அன்புள்ள திரு.இளங்கோவிற்கு,
மரபுக்கவிதை கற்கும் மாணவியான என்னை
வலைச்சரத்தில் அறிமுகம் செய்த உங்களுக்கு
என் மனமார்ந்த நன்றி! வாழ்த்துகள்!
அறிமுகமான சகோதர சகோதரிகளுக்குப்
பாராட்டுகள்!
(வலைச்சரத்தில் பதிவை இடமுயன்றேன் இடமுடியவில்லை.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

இராஜராஜேஸ்வரி said...

வெங்க டம்தனில் ஆடுவான்
...விரிந்த தாழ்சடை கொண்டவன்
செங்கழல் மறை போற்றிடும்
...திங்கள் கொன்றை பாம்புடன்
கங்கை சூடரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே.

அழகான அரன் துதி ..பாராட்டுக்கள்..

Thangamani said...

அன்பு ராஜேஸ்வரி மிக்கநன்றி ம்மா.