Thursday, February 14, 2013

திருக்கண்டியூர்-- 4

 வெய்ய ழல்சுடு காட்டினில்
...வெந்து சாம்பலென் றாகுமுன்
தைய லாளுமை பங்கனின்
...தாளி ணைத்துணைவேண்டியே
மெய்யன் உண்பலித் தேறிட
...வேதன் வெண்டலை ஓடுடைக்
கையன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....7

கொண்டு வந்ததென்? போகையில்
...கொண்டு செல்வதென்? என்பதைக்
கண்டு மெய்யினைத் தேர்ந்திட
...கங்கை யான்கழல் சூடியும்
மண்டும் பேரருள் போற்றியை
...மகிழ்ந்து ஏற்பவன் நஞ்சையுண்
கண்டன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....8


No comments: