Monday, February 4, 2013

திருக்கண்டியூர்--- 1


(அறுசீர்விருத்தம். 'மா கூவிளம் கூவிளம்' என்ற அரையடி வாய்பாடு.)

நோவி னாலுயிர் வாடிட
...நொந்து சொந்தமும் கூடுமுன்
நாவி னித்திடும் பேரனை
...நம்பி போற்றிடும் பத்தியில்
வாவி சூழ்கமழ் பூம்பொழில்
...மஞ்சு லாவிடும் வானுயர்
கோவி லானுறைக் கண்டியூர்க்
...குறுகி உய்ம்மட  நெஞ்சமே.

குறுகி=அணுகி.



நிந்தை பட்டுழல் மூப்பினில்
...நெருங்கும் காலனைக் காணுமுன்
எந்தை ஈசனார் பொற்கழல்
...ஏத்தி போற்றிகள் சொல்லிட
முந்தை ஊழையும் தீர்ப்பவன்
...மொய்க்கும் வண்டுசூழ் பூமலி
கந்த மார்பொழிற் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே.

No comments: