Wednesday, February 6, 2013

திருக்கண்டியூர் -- 2

வேளை வந்திட அந்தகன்
...வீசும் பாசமும் அண்டுமுன்
கோளை வானொளிர் மீனினைக்
...குறித்த பாதையில் ஓட்டுவான்
தாளை பற்றிடும் சிந்தையாய்த்
...தஞ்சம் வேண்டிடக் காப்பவன்
காளை வாகனன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....3

வேட்டுப் பேணிய யாக்கையை
    ...விட்டு யிர்செலு முன்னமே
  ஆட்டுக் காலெடுத் தாடிடும்
   ...ஐயன் உண்பலி தேடுவான்
 சூட்டும் கொன்றையும் தாழ்சடை
    ...மேவியொ ளிர்ந்திடும் ஓர்விழி
 காட்டும் நெற்றியன் கண்டியூர்
   ...கருதி உய்ம்மட நெஞ்சமே....4

No comments: