Sunday, February 10, 2013

திருக்கண்டியூர் --- 3

நோதல் சேர்பிணி மூப்பினில்
...நொந்து பேசொணாப் போதினில்
பாத கன்யமன் வீசிடும்
...பாச மோடுயிர் ஏகுமுன்
நாதன் வெண்டலை யிற்பலி
...நாடி நல்லிசை மாந்திடும்
காதன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....5

 கண்ணி லாதவன் வீசிடும்
...கால பாசமும் அண்டுமுன்
வெண்ணி லாத்துளி விண்ணதி
...வேணி சூடிய  செய்யவன்
புண்ணி யக்கழல் பற்றிடின்
...பொங்கும் அன்பினை நெற்றிசேர்
கண்னில் காட்டரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....6

கண்ணிலாதவன்=அந்தகன்.(இயமன்).
இரக்கமில்லாதவன் என்னும் பொருளில்.

No comments: