Saturday, January 26, 2013

திருப்பூந்துருத்தி--- 5

இயலும் வகையில் இறைவன் நினைவாகப்
பயனைக் கருதாப் பணிசெய் அடியாரை
அயலில் பொன்னி அலைபாய் பூந்துருத்தி
அயனின் அருளால் அடையா அருவினையே....9

காற்று பூமி கனல்நீர்  வானாகத்
தோற்று வானைத் துதிக்கும் அடியார்கள்
நீற்றில் ஒளிர்ந்து நிற்கும் பூந்துருத்தி
ஆற்றன் அடியை அடைதல் அழகாமே....10.

No comments: