Friday, January 25, 2013

திருப்பூந்துருத்தி-- 3

சாவா மருந்தாய்த் தாங்கும் திருப்பெயரை
நாவால் துதித்து நம்பன் அருள்சேரப்
பூவார் நந்த வனம்சூழ் பூந்துருத்தி
தேவா என்னத் தீரும்  தீவினையே....5

தூதா யன்று தோழற் காய்நடந்த
பாதா உமையோர் பாகா மறைவிரிக்கும்
போதா அளிசூழ் பொழிலார் பூந்துருத்தி
நாதா என்ன நாளும் வருமின்பே....6

No comments: