Thursday, November 29, 2012

திருக்கானூர்-- 2

எஞ்சும் நாளில் முதுமையினில்
    ....இடர்கள் பலவும் பட்டுழல
    அஞ்சும் காலன் வருமுன்னே
    ....அரன்பேர் போற்றி அடைநெஞ்சே
   பிஞ்சு நிலவும் பேரலையாய்
    ....பெருகும் நதியும் கொன்றையுமே  
    குஞ்சி வைத்தான் உறைகோவில்
    ....கொள்ளி டஞ்சூழ் கானூரே....3

ஆறு தலதை விழைமூப்பில்
....அண்டும் துன்பம் எத்தனையோ
நீறு புனைந்து நெகிழ்ந்துருகி
....நேயன் போற்றி அடைநெஞ்சே
ஆறு சடையன் ஆலின்கீழ்
....அமரும் தவம்செய் போதமருள்
கூறும் ஒருவன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....4

No comments: