Monday, December 3, 2012

திருக்கானூர் -- 3

சீரார் இளமை தேயபிணி
....தேடி வரவும்  இயமபடர்
ஓரா துயிரைக் கொள்ளுமுனம்
....உய்வை நாடி அடைநெஞ்சே!
காரார் கண்டன் கதியாகி
....கனிவோ டருளும் கழலனவன்
கூரார் மழுவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே....5

தள்ளும் வயதில் தடுமாறித்
....தடிக்கை கொண்டு பிணிமூப்பில்
விள்ள முடியா வேதனையை
.... விட்டு விலக அடைநெஞ்சே
அள்ளும் மலரின் மணமாக
....அருளும் வள்ளல் ஒளிர்பிறையை
கொள்ளும் சடையன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....6

தள்ளும் வயது என்றால்,
நடக்க முயலும்போது சுதாரிக்க இயலாமல்
'தள்ளும்'வயதான முதுமையில் என்ற பொருளில்.

திருக்  கானூர்
 

No comments: