7)
பொருத்த மான சதங்கை கழலில் பொலிய ஒலிசெய்தாள்
வருத்தும் வினைசெய் நோயைத் தீர்க்கும் மருந்தா கிடும்பொற்றாள்
கருத்தில் என்றும் நிலையாய் நின்று காக்கும் வரமாம்தாள்
அருத்தி யோடு பத்தர் போற்றும் ஆரூர் அரன் தாளே.
8)
தலையில் அரவு கொன்றை மதியும் தாங்கி அருளும்தாள்
அலையும் மனத்தை அடக்கி அருளில் அணைக்கும் புனிதத்தாள்
கலையும் கனவாம் உலக வாழ்வை கதியில் செலுத்தும்தாள்
அலர்கள் தூவி அமரர் போற்றும் ஆரூர் அரன் தாளே.
வயசு கோளாறு
4 months ago
No comments:
Post a Comment