Saturday, March 17, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை) -- 2

வெள்ளிப் பனியாய் விளங்கும் மலைமன்னன்
துள்ளும் நதியைச் சுமக்கும் சடைகொண்டான்
கொள்ளும் தயையில் கொடுக்கும் அருளின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே....6

மறைஆர் திருமா மதுரை நகர்தன்னின்
இறையாய்க் கொலுவில் இனிதாய் அருளீந்தப்
பிறைஆர் சடையன் பலவே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே....7

நிலையாய் கதியாய் நிழலாய் எளியோர்க்காய்
இலையே துயரம் எனவே அருளீவான்
அலையார் நதியோ(டு)அராகு ரவம்சூடி
கலைமான் கரத்தன் கைலை மலையானே....8

விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துநிகர் எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைதன் கரம்கொண்டான்
கரைசேர்த் திடுவான் கைலை மலையானே....9

விதிசெய் தளையை விலக்கும் இறையோனை
துதிசெய் பவரின் துணையாய் வருமீசன்
நிதியன் அருள்வான் நிகரில் பரிவோடு
கதியைத் தருவான் கைலை மலையானே....10

2 comments:

sury siva said...

I was literally waiting for the latter part of your composition. No sooner you published it, I sang the song. The song is so supreme in its poetic flavor and fervor that without any effort i could sing in three different raagas, first in Hindholam, then in Punnaga varali, and the last, being the concluding part, in conventional style, in Madhyamavathi.
you may listen to both in my blog
http://menakasury.blogspot.com
subbu rathinam.

Geetha Sambasivam said...

ஆஹா, வெகு எளிமையும், சரளமுமாக வந்து மனதைத் தொடுகின்றது. நன்றி அம்மா.