Thursday, March 22, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) --1

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்)
----------------------
(அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')

1)
பூக்கும் மலர்கள் பொலிய இலங்கும் பொற்றாள் வினையாவும்
தீர்க்கும் அடியார்க் கருளை சேர்க்கும் திருத்தாள் எரிகானில்
சேர்க்கும் லயத்தில் துடியார் நடமே செய்தாள் புகழ்சேர்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே.
2)
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தர்தாம் சாற்றித் தொழும்நற்றாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே.

1 comment:

Geetha Sambasivam said...

அரன் தாளடி பற்றித் தொழுதேன். நன்றி.