Saturday, January 8, 2011

திருஆனைக்கா ஈசன்!

தவமும் துதியும் சேர்க்கும் விடையவனே
...தவிக்கும் மனத்தின் புதிரும் விடையவனே
நவமும் திகழ அணிவார் பணியினையே
...நாடிச் செய்வார் இறைவன் பணியினையே
புவனம் இயக்கும் அரனும் குறைமதியர்
...புரியார் சிவனைத் துதியார் குறைமதியர்
பவமும் தொலைத்தே அருளைப் புரிவானே
...பதியாம் ஆனைக் காவைப் புரிவானே! ...3

பணி = பாம்பு.

2 comments:

jeevagv said...

இருபொருட் சொற்களின் இனிமை, இனிமை!

Thangamani said...

நன்றி!ஜீவா!