Monday, January 10, 2011

திருஆனைக்கா ஈசன்!

அடியும் முடியும் காணார் மாலையனே
...அணியாம் முடைசேர் எலும்பு மாலையனே
வடிவில் மிளிர நடிக்கும் நடிகன்நீ
...மண்ணோர் நடிக்க இயக்கும் நடிகன்நீ
படியாம் உலகும் தழைக்கும் நீரானே
...பஞ்ச பூதத் திலொன்றாம் நீரானே
புடையில் வைத்தாய் உமையாம் பொன்னினையே
...புகழ்வோம் ஆனைக் காவின் பொன்நினையே! ...4

திருவானைக்காவில் அப்பு(நீர்)லிங்கமாகக் காட்சி தருகிறார்.

No comments: