ஆய்ந்தே சங்கத் தமிழ்தேர் ஏடுடையான்
...அடியார் தமிழ்ப்பா காத்த ஏடுடையான்
ஊழ்வாய்ப் படும்போ தருளும் அக்கரமே
...உய்க்கும் நாமம் அஞ்சாம் அக்கரமே
தூய்தாள் நடிக்கும் ஞானக் கூத்தாடி
...தொங்கும் கழியே வாழ்வாம் கூத்தாடி
பாய்ந்துண் டானே நஞ்சாம் அமுதினையே
...பணிவோம் திருவா னைக்கா அமுதினையே!...5
அக்கரம் = அட்சரம் (எழுத்து),
அஞ்சக்கரம்(அஞ்செழுத்து)
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment