Tuesday, January 18, 2011

திருஆனைக்கா ஈசன்! - 10


அண்ட மெல்லாம் புரக்கும் இனியவனே
...அனைத்து மவனென் றடைந்தார்க் கினியவனே
உண்ட வனருள் ஓது அஞ்செழுத்தே
...உணரும் அடியார் இசைப்பர் அஞ்செழுத்தே
தொண்டர் தமின்பு துன்பில் பங்குடையான்
...துணையாம் உமையை இடதுப் பங்குடையான்
தண்ட பாணி பணியும் ஐயன்நீ!
...தருசூழ் ஆனைக் காவின் ஐயன்நீ! ....10

தண்டபாணி=முருகன்.

அண்டங்களைத் தாங்கி, ஆதரிப்பவன்.
அடைக்கலம் என்பார்க்கு, இனி எல்லாமும் அவனே.
அஞ்செழுத்தை உரைத்தால் நிச்சயம் அருள்வான்.
அடியார் மனமெல்லாம் நிறைவாகி அஞ்செழுத்தைப் பண்ணிசைப்பார்.
அன்பர் இன்ப, துன்பத்தில் பங்கு கொள்ளும் இறைவனவன்.
உமையை இடதுப் புறம் உடையவன்.
முருகன் பணியும் தந்தை நீ.
வனம்சூழ்ந்த திருவானைக்காவின் தலைவன் நீ.

No comments: