Tuesday, October 26, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 5


(தானனா தானன..தந்த தான-- 5)

வாரிமீ தாடுது..ரும்ப தாக
...வாடுவோர் நாடிடும்..அஞ்சல் ஈவாய்
சாரியாய் ஊழ்துயர்.. தந்த போதுன்
...தாளதே நானுணர்.. சிந்தை யாவாய்
கோரியே மாதவள்.. வந்தி நாடும்
...கூலியா ளாகுவை..சுந்த ரேசா
ஆரியா ஆதர..வென்று மானாய்
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.

3 comments:

jeevagv said...

ஆகா, அருமை!

Thangamani said...

அன்புள்ள ஜீவா,
உங்கள் பாராட்டுக்கு மகிழ்வோடு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

புட்டுச் சுமந்தது கண்ணில் வருது. நன்றி அம்மா.