Saturday, October 2, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--1

வஞ்சி விருத்தம்.
-------------
'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.


நீர்த்திரை பனித்திட நெகிழ்வுடன்
நாத்தழும் பேறிட நானுனை
ஏத்திடு மாறறி யேனெனை
காத்தருள் கச்சியே கம்பனே....1.

நைவினை துயர்தரும் நாளுமே
எய்திடும் புகலினை எண்ணியே
துய்மலர் மாலைகள் சூட்டினேன்
கைகொடு கச்சியே கம்பனே.... 2

2 comments:

தோழி said...

woww super..

Thangamani said...

மிக்கநன்றி தோழி!

அன்புடன்,
தங்கமணி.