(தானனா தானன .. தந்ததான)
பூரணா நீறணி..கின்ற ஈசா
...போதமே நானறி..கின்றிலேனே
பாரமார் ஊழ்தரு.. துன்பு மாயும்
..பாதமே நாடுயர்.. சிந்தை ஈவாய்
காரணா தீயெரி.. கின்ற ஈமம்
...காதலோ டாடிடு.. மன்ற மாகும்
ஆரமாய் மார்பிசை..கொன்றை யோடே
...ஆலவாய் மேவிய..எம்பி ரானே.
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment