Wednesday, March 31, 2010

என்னால் முடியும்!

என்னால் முடியு மென உறுதியுடன் முயன்றிடுவாய்!
...ஏறுமுகம் நிச்சயம்!
சொன்னால் முடிவதில்லை செயலாற்ற முனையவரும்
...சோதனையை வென்றிடு!
முன்னால் பெரியவர்கள் சொல்லிவைத்த அனுபவங்கள்
...முற்றிலும்தான் உண்மையே!
பொன்னாய்ப் புடமிடவே பொற்பாகும் உயர்வினிலே
...போற்றிடவே வாழ்ந்திடு!

(சந்தவசந்தக் குழுமத்தில் சில வருடங்கள்
முன் இட்டது.கொஞ்சம் சரிசெய்து இட்டுள்ளேன்)

No comments: