(ஒன்று,மூன்று,ஐந்து, சீரெதுகைகள்.
அடியீற்றில் இயைபு வரத் தொடுத்தல்.)
கங்கா தரனே வெங்கா டுடையாய்!மங்கா ஒளியே!அருவானாய்
துங்கா! உமையாள் பங்கா! பவமே தங்கா தருளும் குருவானாய்!
பொங்கார் கழலின் சங்கார் ஒலியின் சங்கீ தநடம் உனதாகும்!
சங்கா ரசிவா! எங்கோ! உனது சிங்கா சனமென் மனமாகும்!
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment