Thursday, March 18, 2010

வண்ணப் பாடல்!--- 2.

'தந்தனாத் தானத்..தனதான'

பிஞ்சகாத் தேடற்.. கரியோனே!
...பித்தனாய்ப் பாடற்.. கெளியோனே!
நஞ்சமாய்க் காணக் களமானாய்!
...நம்புவார்க் காகத்..துணையாவாய்!
வஞ்சமீக் கூரத்..தருமாயை
...மண்டிவாட் டாதக் கழலோனே!
தஞ்சமாய்த் தாளைப்..பணிவோரின்
...சங்கமாய்ச் சேரற்.. கருளாயே!

No comments: