Sunday, March 21, 2010

கோதிலானைப் பாடுவோம்!

6தேமா+கூவிளம்.

ஆதி யாய நாதி யான
...சோதி யானை நாடுவோம்!
நீதி வாழ பூதி தந்த
...கோதி லானைப் பாடுவோம்!
பாதி யான மாதின் நேயன்
...சோதித் தாளும் மெய்யனாம்!
வாதி டாமல் ஓதி யென்றும்
...போதிப் பாரின் ஐயனாம்!

No comments: