Thursday, June 6, 2013

திரு வலம்--2

பிட்டதை செய்பவள் பணியினில் துணையவன்
மொட்டவிழ் மலரிடும் அடியவர் இடரதும்
பட்டிட அருள்செயும் பசுபதி உறைவிடம்
மட்டலர் மலிபொழில் அணிதிரு வலமே....3

விதியதன் விளைவினில்  வருமிடர் பொடிபட
நதியணி சடையினன் பதமலர் அருளுவன்
சதியுமை இடமதில் உடையவன் உறைவிடம்
மதியண விய மதில் அணிதிரு வலமே....4

வடிவுடை உமையவள் பதியவன் கடமதில்
துடியடி ஒலியினில் நடமிடும் தனியவன்
கடிகமழ் மலரணி அழகனின் உறைவிடம்
அடியவர் வினைகெட அடைதிரு வலமே....5





2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

Thangamani said...

மிக்கநன்றி தனபாலன்.