Saturday, November 21, 2009

காரைக்கால் அம்மையார் !

புடமிடு பொற்பில் புரிதவ யாக்கைக்
கடனென அம்மைக் கருதிடும் காட்சி
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்
நடமிடு கோலம் நயந்தளித் தானே.

(காரைக்கால் அம்மைக்கு ஈசன் அருள்செய்தது)

புடமிடு பொற்பில்=புடமிட்டப் பொன்னின் தன்மையில்
புரி தவ யாக்கை=செய்த தவத்தால் கிடைத்தப் பேய் யாக்கை,

"நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்" ஈசன் கூற்று.(சேக்கிழார்)
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்=சுடலையின் வெண்பொடிப் பூசிய ஈசன்.
அம்மைக் கருதிடும் காட்சி = "அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருந்து, பாடி உன்நடம் காண வேண்டும் என்ற வேண்டுதலுக்கு இறைவன் "ஆலம்காட்டில் என்நடம் காண்!" என்று காட்டுவித்தார்.

அன்புடன்,
தங்கமணி

No comments: