Wednesday, December 19, 2012

இலம்பையங்கோட்டூர் -- 2

பாடிடும் அன்பரின் பாவலங்கல்
சூடிடும் அருள்நிதி தோன்றுமிடம்
தேடிடும் பொழில்மலர்த் தேனளிகள்
கூடிடும் இலம்பையங் கோட்டூரே....6

நளிர்மதி சடையனை நாடிடுவோர்க்(கு)
ஒளிர்கழல் அருள்பவன் உறையுமிடம்
துளிர்விடு முகைமலர்ச் சுரும்பினமார்
குளிர்பொழில் இலம்பையங் கோட்டூரே....7

 நிசமவன் தீங்கினை நீக்கியன்பில்
வசமுற அருள்கிற வள்ளலிடம்
அசைவுறு வணம்குயில் ஆர்த்திடும்பண்
இசைமலி இலம்பையங் கோட்டூரே....8

பன்னகம் அணிபவன் பைந்தமிழில்
சொன்மலர் மாலைகள் சூடுமையன்
பொன்னவன் உறைவிடம் பூஞ்சுரும்பார்த்(து)
இன்புறும் இலம்பையங் கோட்டூரே....9

திசையறி கிலாவெளித் திரிகோள்கள்
விசையுறு கதிசெல விதித்தவன்நல்
இசையது வானவன் இருக்குமிடம்
இசையுடை இலம்பையங் கோட்டூரே....10








1 comment:

Thiruvarur News said...

அருமை!!!

திருவாரூர், உலகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆரோக்கியம் மற்றும் சமயல் தொடர்பான செய்திகளுக்கு
VISIT: திருவாரூர் செய்திகள்