Thursday, September 22, 2011

புள்ளி ருக்கு வேளூர்--௪ (வைத்தீஸ்வரன்கோவில்)

ஏற்றும் சிறுவன் உயிர்காக்க
...இரக்கம் மிகவும் கொண்டவனாய்க்
கூற்றும் மாள உதைசெய்யும்
...கோபம் கொண்ட கூத்தனவன்
சாற்றும் வேதப் பொருளாவன்
...தஞ்ச மென்றே அடியார்கள்
போற்றும் பெருமான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....7

"தொன்மை தொடராய்த் துன்பதுவாய்ச்
...சூழும் வினைகள் தீர்ந்திடவே
நின்மெய் யருளைத் தந்திடுவாய்!
...நிமலா வேண்டித் தொழுகின்றேன்!
என்மெய் யுடைமை நீயன்றோ!"
...என்றே தஞ்ச மடைவாரின்
புன்மை தீர்ப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....8

No comments: