Wednesday, September 14, 2011

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)--2

நாக்கும் உரைக்கும் நாமசுவை
...ந்விலுந் தோறும் இனிதாகும்
தூக்கும் மலர்தாள் தொழுமன்பர்
...துணையாம் நீல மணிகண்டன்
ஆக்கும் அளிக்கும் அழிசெய்தே
...அருளு மீசன் அமர்கோவில்
பூக்கும் நந்த வனம்சூழும்
...புள்ளி ருக்கு வேளூரே....3

தேரே றியருள் செய்யுமரன்
...சீரேர் விழவில் உலாவருவான்
தூரே மலியும் உள்ளந்தனை
...தூய்மை யாக்கும் தாளிணையை
ஓரே .னெனையும் காத்திடுவான்
...உமையின் பங்கன் செஞ்சடையன்
போரே றேறி அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....4

No comments: