Tuesday, September 20, 2011

புள்ளிருக்கு வேளூர்--3(வைத்தீஸ்வரன் கோயில்)

நோவாய் வினைசெய் துன்பகலும்
...நுவலும் அஞ்சக் கரத்தாலே
நாவா யாகக் கரைசேர்க்கும்
...நம்பன் மலர்தாள் பற்றிடவே
பாவாய்ப் பண்ணாய் அடியார்கள்
...பரவும் கருணை வாரிதியாம்
பூவார் சடையன் அமர்கோவில்
... புள்ளி ருக்கு வேளூரே....5

சீத வெள்ளிப் பனியிமயச்
...செல்வன் வேண்டும் அன்பருக்கே
பாத மலரைத் தந்தருளும்
...பரமன் தயையின் வடிவாகி
ஏத மிகுவெவ் வினைத்துன்பாம்
...இன்னல் தீர்க்கும் மருந்துமவன்
பூதப் படையான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....6

2 comments:

Geetha Sambasivam said...

நாவா யாகக் கரைசேர்க்கும்
...நம்பன் மலர்தாள் பற்றிடவே


மலர்த்தாளைப் பற்றிடுவோம்.

Thangamani said...

வாருங்கள் கீதா,மிக்கநன்றிம்மா.