Monday, May 16, 2011

திருஞானசம்பந்தர் துதி!

அம்மே எனவழுது அன்றுண்டார் ஞானப்பால்
பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
புகழினையேத் தேவாரப் புத்தமுதாய்த் தந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்...1

பொங்கலை வானதிப் பூண்ட சடையனைத்
தங்கரங் கொட்டியே சாற்றுகையில்--எங்கும்
புகழொலிக்க ஈசனிடம் பொற்றாளம் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...2

அல்லும் பகலும் அரனின் நினைவினில்
வெல்லும் எமபயம் மெய்யென்ற-- நல்லன்
சகமிதன்சீர் மேவிடு சம்பந்தன் மாணி
புகலியர்கோன் பொற்றாள் புகல்...3

மழவன் மகள்நோய்தீர் வாடாப் பதிகம்
அழகாய் அருளிய அன்பர்-- குழகன்
உகந்தளிசீர் பல்லக்கில் ஊரும் இளையோன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...4

நாள்களும் கோள்களும் நல்லன எம்மானின்
தாள்தொழும் அன்பர்க்கே சாலுமென்றார்-- வேளை
மிகவிழித்துத் தீப்படச் செய்தான் அடியர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...5

2 comments:

Geetha Sambasivam said...

கடைசிப் பாடல் மிக அருமை.

Thangamani said...

நன்றி,கீதா!