Friday, May 13, 2011

வண்ணப் பாடல்!

கன்றி ,.னாவென நாடி யருளுவை
...கொன்றை சேர்சடை ஈச உனதடி
...என்று மேமற வாத நிலைதனை.. அருளாயோ
ஒன்ற தாகிய மூல முதலுனை
...என்ற .னாதரம் ஆய அருளென
...உன்ற .னாடிய பாத முளமுற.. மகிழேனோ!
தொன்று சேர்வினை யாவு மழியவை
...துன்ப மேபவ வாரி வடியவை
...துன்றி நேயம தூறு முனதிரு .. வருள்தாராய்
நின்றி டாதயை நாடு மடியரின்
...நெஞ்ச மேவிய கோவி லுறைதிரு
...நின்ற ஊரினை ஆளு மறையறை.. பெருமானே!

No comments: