Saturday, May 21, 2011

திருஞானசம்பந்தர் துதி!

திருமடம் தீயரால் தீப்பட நற்பா
அருளி அழலை அணைத்தப் --பெருகும்
தகவதனைப் போற்றிச் சழக்கரை வென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...6.

கலயம் கொளுநீறை கன்னியாய் மீட்டத்
தலமுறு நற்பதிகம் தந்த -- நலத்தர்
நிகரிலியாய் கூத்திடும் நிர்மலன் அன்பர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...7.

யுகமும் கணமும் உருளச் சுழன்றே
இகத்தை இனிதாய் இயக்கி -- உகப்பான்
சிகையில் மதிசேர் சிவனருட் செல்வன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...8.

அருட்கவி அப்பருடன் அன்றுதமிழ் பாடி
திருத்தாழ் திறந்தடைத்த செல்வர்-- விருப்பில்
புகையெரிகான் ஆடிடும் புண்ணியன் மைந்தன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...9.

சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...10.

No comments: