பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன் நீல மணிமிடறன்
வெற்றி தரும் அரனின் வெண்கா டடைமனமே!
பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
காத லுறுமனதில் காட்சி தருமிறையாம்
வேத முழுமுதல்வன் வெண்கா டடைமனமே!
பண்ணீ ரொருதவமும் பாவ வினையொழிமின்!
கண்ணீ ரதிலுணர்ந்து காணும் அருள்நிதியன்
தண்ணீ ரென உயிரைத் தாங்கும் இறைவனவன்
வெண்ணீ றணிஅரனின் வெண்கா டடைமனமே!
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment