செஞ்சடை யோனே! செங்கழல் பாதா!
...திருமுக ஒளியினில் நிறைமனம் பெறவை!
நஞ்சமு துண்டாய்! நம்பிடு வோர்க்கு
...நலமுறு கருணையை நயமுடன் புரிவாய்!
அஞ்சலி செய்தே அன்புடன் ஓர்ந்தால்
...அமுதினு மினிதெனும் அகமதில் வருவாய்!
சஞ்சல மில்லா சாந்தியை வேண்டின்
...சடுதியில் அடைகென சரணிணை அருளாய்!
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment