Tuesday, July 7, 2009

நடம்காணீர்!

பம்பைத் துடியொலியும் பாடலும் சங்கமிக்க
நம்பன் பயிலும் நடம்காணீர்!-- தும்பை
மருவுடன்நன் கொன்றை மலர்சூடும் கூத்தன்
அருளமுதப் பார்வை அழகு.

2 comments:

Geetha Sambasivam said...

நம்பன்=??
இங்கே என்ன பொருள்????

Thangamani said...

கீதா!
நம்பன்= நம்பி!அதாவது சிவனைக் குறிக்கிறது.

அன்புடன்,
தங்கமணி.