Thursday, June 18, 2009

கவிதை ஊறும்!

கோலமயில் நடமாடி அழகை வார்க்கும்!
...குமரனவன் வாகனமாய் மனதை ஈர்க்கும்!
ஓலமிடும் கடலாடும் அலையும் மோதும்!
...உவகையினில் வேலவனின் புகழை ஓதும்!
சீலமிகு அடியாரின் தெளிவில் தோணும்
...சிவகுருவின் பார்வையெனும் ஒளியில் காணும்!
மாலவனின் மருகோனை மறையும் கூறும்!
...மனமுருகும் பக்தியினில் கவிதை ஊறும்!

2 comments:

மயாதி said...

good

Thangamani said...

அன்புள்ள மயாதி!
நன்றி.

அன்புடன்,
தங்கமணி.