Monday, June 22, 2009

உனையே கும்பிடுவேன்!

தண்ணார் பொழிலே! தண்தடமே!
...தவமாய் அருளும் சிற்பரனே!
பண்ணார் இசையில் நெஞ்சினிக்கப்
...பரவும் அடியார் தம்மிறையே!
கண்ணே! மணியே! கண்நுதலே!
...கனியே! சுவையே! தெய்வதமே!
விண்ணோர் அமிழ்தே! கற்பகமே!
...விகிர்தா! உனையே கும்பிடுவேன்!

2 comments:

sury siva said...

வணக்கம்.
தங்களது பாடல் தமிழகத்தில் மிகப் பிரபலமான காவடிச்சிந்து
எனும் மெட்டில் பொருத்தமாகவே அமைகிறது.

பாட்டுடைத் தலைவனாம் இறைதனை உருவாகவும் அருவாகவும்
அடியார்தம் நெஞ்சினிக்க அமரும் இறையாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
சிற்பரனே என்பது சிற்சபேசனோ ? பதில் ஒரு சொல் நவின்றால்
உதவியாக இருக்கும், இறை சார் படங்களுடன் பாடலைப் பதிப்பதற்கு.

சுப்பு ரத்தினம்.

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு.
சிற்பரனே என்று எழுதியிருக்கிறேன்.
உங்கள் ஆர்வத்திற்குஎன் நன்றி!

அன்புடன்,
தங்கமணி.