Monday, February 2, 2009

அம்மானை

அம்மானை

ஏறுமயில் வாகனனார் ஏறுகந்தார் தம்குருவாம்
மாறுபடு கோல மலையர்காண் அம்மானை
மாறுபடு கோல மலையரே ஆமாகின்
வேறுபடு கோலத்தின் மேன்மையென்ன அம்மானை?
ஆறுதலை கொண்ட அருளாளர் அம்மானை

4 comments:

Kavinaya said...

உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கம்மா. அறிமுகம் செய்த ஜீவாவிற்கு நன்றிகள்.

Thangamani said...

அன்புள்ள கவிநயா!
மிக்க நன்றிம்மா!

அன்புடன்,
தங்கமணி.

Anonymous said...

அம்மானை நன்று; இவ்வாறான பாடல்கள் இயற்றுபவர்கள் இன்று மிகச் சிலரே; பாராட்டுகள்.

என் அம்மானையையும் படித்துப் பார்க்கலாமே!

http://nanavuhal.wordpress.com/2008/12/15/marulvaakku/

அன்புடன்

அ. நம்பி

Anonymous said...

அன்புள்ள சகோதரி,
என்க்கு அம்மானை பாட்டின் அர்த்தம் புரியவில்லை.
பிறகு விளக்கவும்.
உமா.