Friday, March 15, 2013

திருநீலக்குடி--- 1

 திருநீலக்குடி.
('மா மா மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.)

தீயர் கல்லில் சேர்த்துக் கடல்தள்ளத்
தூய .னவன்பேர் துணைகொள் அடியாரைப்
பாய லைதனில் கலனாய் அருள்செய்யும்
நேயம் உடையார் நீலக் குடியாரே....1

நனைசேர் பூக்கள் நாடிப் பதம்சூட்டிப்
புனைவார் பூந்தாள் புனிதத் திருநாமம்
வினைசேர் கடலில் மீட்கும் கலனாக
நினைவார்க் கினியார் நீலக் குடியாரே....2
நனை=தேன் எனும்பொருளில்.

கன்றின் தாயாய்க் கனியும் அருளாளர்
மன்றில் ஆடும் மலையர் திருநாமம்
ஒன்றும் உளமோ டுன்னத் துணையாக
நின்று காப்பார் நீலக் குடியாரே....3

பதியாய் உமையோர் பங்கில் உடையாரைச்
சுதியாய்ப் பண்ணில் துதிக்கும் அடியாரின்
கதியாய் நின்று கருணை நிறையன்பின்
நிதியாய் வருவார் நீலக் குடியாரே....4

ஆரார் உறவார் அறிவார் உனையன்றி
வேறார் அருள்வார்  விமல வெனப்போற்றும்
சீரார் அடியார் தெய்வம் கயல்துள்ளும்
நீரார் வயல்சூழ் நீலக் குடியாரே....5

No comments: