Saturday, December 15, 2012

இலம்பையங்கோட்டூர்-- 1

இலம்பையங்கோட்டூர்
-----------------------------
('
விளம் விளம் காய்' - என்ற அமைப்பு.சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")

வார்சடை மீதொளிர் மதியுடையான்
சீர்மிகு பேர்தொழும் அன்பருளம்
சார்பவன் உறைவிடம் தண்பொழில்சூழ்
ஏர்மலி இலம்பையங் கோட்டூரே....1

விழிநுதல் உடையவன் வெவ்வினைசெய்
பழியினில் தொடரிடர்ப்  பார்த்தருளைப்
பொழிகுவன் உறைவிடம் பூஅளியார்
எழில்பொழில் இலம்பையங் கோட்டூரே....2

கரும்பினை கரம்கொளும் காமாட்சி
விரும்பிடும் ஈசனும் வேண்டுவதைத்
தரும்பதி உறைவிடம் தண்ணளியார்
இரும்பொழில் இலம்பையங் கோட்டூரே....3

ஊர்விடை அமர்பவன் உண்பலிதேர்
ஓர்முடைத் தலையெனும்  ஓடுடையான்
நீர்மடை எனவருள் நெஞ்சனிடம்
ஏருடை இலம்பையங் கோட்டூரே....4

தருஞ்சுக மவன்கழல் சாற்றுமன்பர்
பெருஞ்சுமை யெனும்வினை தீர்த்தருளும்
அருஞ்சுவைப் பேருடை ஐயனிடம்
இருஞ்சுனை இலம்பையங் கோட்டூரே....5





1 comment:

My Tiruvarur said...

சூப்பர்!!!

திருவாரூர், உலகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆரோக்கியம் மற்றும் சமயல் தொடர்பான செய்திகளுக்கு
VISIT: திருவாரூர் செய்திகள்