Wednesday, June 6, 2012

தாராசுரம்--2

ஆலம்கறை கண்டன்கழல் அணிவாரவர் தொண்டை
காலம்நிலைத் திடச்செய்புகழ் காணத்தரும் சிற்பம்
ஞாலம்தனில் செப்பும்தளி தாராசுரம் சென்று
சூலன்றனைத் தொழுவார்களைத் தொடராவினை தானே....6

எல்லாமவன் அருளாகிடும் என்றேநினைத் தன்பால்
சொல்லாலுயர் செயலால்விழுத் தொண்டாற்றியர் உய்வை
கல்லாலொரு கதைசொல்தளி தாராசுரம் சென்று
வல்லான்கழல் தொழுவார்களை மருவாவினை தானே....7

தாயாயொரு பெண்ணுக்கருள் தந்தானவற் கன்பால்
ஓயாதவன் பணியேசெயும் உறுநர்தம துய்வை
தேயாஒளிச் சிலைசொல்தளி தாராசுரம் தன்னில்
சேயான்கழல் தொழுவார்களைத் தொடராவினை தானே....8

எரிபொங்கழல் அருவானவன் இருவர்தொழ அருள்வான்
விரிசெஞ்சடை ஈசன்கழல் விழைதொண்டரின் உய்வை
சரிதஞ்சொலும் சிற்பத்தளி தாராபுரம் மேய
பரியும்பரன் பாதம்தொழப் பற்றாவினை தானே....9

கொண்டல்தவழ் இமயத்தரன் குளிர்பூங்கழல் சூடி
மண்டன்பினில் பணிசெய்தவர் மறையாப்புகழ் வாழ்வைக்
கண்டின்புறச் சாற்றும்தளி தாராசுரம் மேய
அண்டன்கழல் அடைவார்தமை அடையாவினை தானே....10
 

No comments: