6)
ஒலியென்றனை தாளந்தனில் இசைவாளவள் காந்தன்
பொலிவொன்றிய ஒளிவீசிடும் திருவாகிடும் உருவன்
நலிவின்றிட அடியாரிடர் தீர்க்கும்தயை நிதியாய்ப்
பலிகொள்பவன் பழனத்தரன் பாதம்பணி மனமே.
அனை=அன்னை,இடைக்குறை
பொலிவு+ஒன்றிய=பொலிவொன்றிய
7)
சுடரேந்திடும் நுதல்கண்ணினன் முழவோடதிர் துடிசெய்
நடையேந்திடும் திருவாடலில் அடியார்க்கருள் செய்வான்
சடையேந்திய மலர்கொன்றையில் மிளிர்வான்கரம் மழுவாட்
படையேந்திய பழனத்தரன் பாதம்பணி மனமே.
8)
சேர்க்கும்நெறி கூட்டும்அடி யவர்க்கேஉயர் அன்பை
வார்க்கும்விழி நுதலோன்கழல் தொழவேவினை மாயும்
போர்த்தவ்வெழில் வனத்தில்கடும் தவமேசெய கணையை
பார்த்தற்கருள் பழனத்தரன் பாதம்பணி மனமே.
9)
மண்ணாகிடும் யாக்கைக்கொரு நலம்சேர்வழி சொல்வேன்
பெண்ணோரிடம் கொண்டானவன் கழலேதுணை என்றே
"கண்ணா!கறைக் கண்டா!எமக் கருள்வாய்!"என வேண்டிப்
பண்ணார்பொழில் பழனத்தரன் பாதம்பணி மனமே.
10)
தீங்கற்றிடும் உயர்வாழ்வினைத் தருவான்கழல் நாடி
ஓங்கித்திகழ் அழலோன் திருப் புகழ்பாடிட அருளும்
பூங்கொத்துகள் உதிர்ந்தேபுனல் ஆடும்கவின் பொன்னி
பாங்கர்த்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே.
வயசு கோளாறு
4 months ago
No comments:
Post a Comment