Monday, April 18, 2011

திருஒற்றியூர்!

இருளென நாளெனவும்
உருளுமிப் பூவுலகில்
குருசிவன் ஒற்றிநினை
வருவினை அற்றிடுமே...6.

பையர வேயணி
மெய்யனி னொற்றியை
நைவினை இற்றிடக்
கைதொழு துய்வரே...7.

இலம்செயும் தீங்கழி
சிலம்பொலி தாளனின்
பலம்தரும் ஒற்றியை
வலம்வர பெற்றியே...8.

இலம்=வறுமை.
பெற்றி=பெருமை.

பயம்கொள எற்றியே
இயமனை செற்றவன்
நயம்தரு ஒற்றிசேர்
பயனதும் வெற்றியே...9.

நியாயமே செய்பவன்
தியாகரா சன்பெயர்
தியானமே செய்திட
கியாதிசேர் ஒற்றியே...10.

கியாதி= புகழ்.

5 comments:

Anonymous said...

nalla kavithai.. arumaiyaana karuththu..nandri..

Thangamani said...

கருத்துக்கும்,வருகைக்கும்
மிக்கநன்றி!

அன்புடன்,
தங்கமணி.

sury siva said...

http://youtu.be/PaFzYw8jy1Y

ingu vandhu bhoopalam raagathil ungal theiveeka kavithai kezhungal.

subbu rathinam.

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
பூபாள ராகத்தில் பக்தியுணர்வாய்ப்
பாடியதைக் கேட்டு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

அருமையான பாடல் அம்மா.