Saturday, October 19, 2013

பாம்பணி - திருப்பாதாளீச்சரம்--பாமணி(இக்கால வழக்கில் )

தண்ணிறை வெண்பனி சூழ்மலை மன்னன் -- சஞ்சலம் தந்திடும் துன்ப றுக்கும்
பெண்ணுமை பங்கினன் வேளை-- தீயெரி யாகிடச் செற்றான்
பண்ணிய மோடிசை வாய்நடம் செய்யும்--பார்வதி நாயகன் தன்னூர் வண்டு
பண்ணிசை ஆர்பொழில் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....2

ஆலமர் செல்வனை 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும் ஆட லன்றோ
ஆல மருந்திவிண் ணோரைக்  --காத்த கறைநிறை கண்டன்
கோல நிலவுடன் பாயலை கங்கை--கொன்றையும் பாங்குடன் உச்சி  சூடி
பாலன நீறுமெய் பூசும்-- பாம்பணி எம்பெரு மானே....3

 அடி 1-இல் - " 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும்..... "

( சுகலமுனிவர் வளர்த்த (காமதேனு) பசுவானது சிவலிங்கத்தின்மீது
அபிடேகமாகப்பாலைப்பொழிந்தது. முனிவர் தனக்குப் பால் குறைந்து விடுமே என்று
 பசுவைக் கோபித்து அடித்தார்.அந்தப் பசு வருந்தி,வழிபட்டதால்
 தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போல சிவலிங்கத்தை முட்டி ஓடி
 பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது.இறைவன் காட்சிதந்து பசுவை உயிர்ப்பித்தார்.
பசு முட்டியதால் மூலத்திருமேனியில் மூன்று வடுக்களோடு காட்சிதருகிறார்.0

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா... தொடர வாழ்த்துக்கள்...

நன்றி...

Thangamani said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி தனபாலன்.