Thursday, October 17, 2013

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)
=================================================
  (சம்பந்தர் தேவாரம் - 1.39.1 – திருவேட்களம்.
'அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க'

குறிப்பு: பாம்பணி - பாம்பணி என்ற ஊர். (அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருப்பாதாளீச்சரம்). 'பாம்பை அணியும்' என்றும் பொருள்கொள்ளலாம்.




தானன  தானன தானன  தான ... தானன  தானன  தான தான (1&3)

தானன தானன தான ... தானன தானன தான  (2&4)
அடி (1&3)--விளம் கூவிளம் கூவிளம் தேமா/ கூவிளம் கூவிளம் தேமா தேமா /

அரையடி -1எ /3எ :4சீர்கள்.---வெண்டளை விரவிவரும்.
அரையடி 1பி /3பி :4சீர்கள்.--அவற்றுள் முதல்மூன்று சீர்களிடை வெண்டளை விரவும்.
இவ்வரையடியில் 1பி &3பி யில் 3ஆம் சீர் குறிலில் முடியும்.
4ஆம் சீர் குறிலில் தொடங்கும்,3+4 சீர்கள் =  கூவிளங்காய் ஆகும்.
அடி 2&4 -- விளம் கூவிளம் தேமா/ விளம் கூவிளம் தேமா.
                    அரையடி 2எ/4எ :3சீர்கள் - வெண்டளை விரவும் 
                     அரையடி 2பி /4பி : 3சீர்கள் -- வெண்டளை விரவும்.
(அரையடிக்குள்  விளம் வரும் இடத்தில்  தேமா,புளிமா, கருவிளம் 
இவற்றுள் ஒன்றும் வரலாம். அப்படி வரின்  மற்ற சீர்களும் மாறி வெண்டளை பயிலும்.

 கோரிடு மன்பரின் துன்புகள் தீர்க்கும்-- குஞ்சர ஈருரி ஏற்ற மைந்தன்
காரொடு நேர்கறை கண்டன் -- கங்கையை சூடிய செம்மல்
சீரொடு நன்றையும் செய்திடும் சீலன் -- செங்கழ லானருள் தன்னை நண்ணி
பாரொடு  விண்பணிந் தேத்தும் --பாம்பணி எம்பெரு மாளே....1
 

2 comments:

Anonymous said...

வணக்கம்
அம்மா

பதிவு அருமை வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thangamani said...

தங்கள்வரவிற்கும், கருத்துக்கும்
மிக்கநன்றி ரூபன்.