Saturday, December 25, 2010

திருப்பரங்குன்றம்!

பிணிஊழ்ப் பிடிநீங்க
மணிஆர் மதிதன்னை
அணிவான் அடிநாடிப்
பணிவாய் பரங்குன்றே....6

விரைநன் மலர்தூவி
குரைசெய் கழல்பாடும்
பரமன் அடியார்கள்
பரவும் பரங்குன்றே....7

குரை= ஒலி
விரை= மணம்.

திங்கள் சடைக்கன்பர்
துங்கத் தமிழ்பாடும்
மங்கை உமையாளின்
பங்கன் பரங்குன்றே....8

பெற்றம் அமர்வோனாம்
நெற்றி விழியானைச்
சுற்றம் எனுமன்பர்
பற்றும் பரங்குன்றே....9


துகளாய் வினைதீர்க்கும்
புகலாம் கழல்வேண்டின்
இகமாய்ப் பரமாகும்
பகவான் பரங்குன்றே....10

1 comment:

Geetha Sambasivam said...

விரை=மணம், புதிய பொருள் தெரிந்துகொண்டேன். நன்றி.