புளிமா புளிமாங்காய்(வஞ்சித்துறை)
பொலிவெண் பொடிசூடும்
பலிதேர் பரங்குன்றன்
நலிவாம் நவைதீர்ப்பான்
வலிகொள் மனந்தந்தே....1.
புரியா மயல்தீரப்
புரிநீ மடநெஞ்சே
விரியார் சடை ஈசன்
பரிவான் பரங்குன்றே....2.
சிரமோர் மதிசூடி
கரமோர் அருளாசி
வரமாய்த் தருமீசன்
பரமன் பரங்குன்றே... 3.
நண்ணா வினைத்துன்பம்
பெண்ணோர் புறங்கொண்டான்
நண்ணி நினைநெஞ்சே
பண்பன் பரங்குன்றே...4.
பொதியாம் வினைத்தீரப்
பதிவாய் மனமேநீ
கதிதாள் பெறச்செய்யும்
பதியாம் பரங்குன்றே....5.
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment