Friday, April 12, 2013

ஆத்தூர்--1

ஆத்தூர்
--------------
அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5
சீர்களில் மோனை.பாடல்தோறும் ஈற்று அடியில் 5-ஆம் சீரில் எதுகை அமைந்துள்ளது.

வானூர் மதிசேர் சடையில் கொன்றைச் சரமும் அணியாகும்
ஊனார் முடையாய் நாறும் தலையில் உண்ணும் பலித்தேர்வான்
மீனார் விழியாள் உமையோர் பங்கன் மேவும் பதியென்பார்
வானீர்ப் பொருநைத் தென்பால் மகிழும் தேனார் ஆத்தூரே....1

வால வயது சிறுவற் கருள மறலி யுதைசெய்த
கால காலன் விண்ணோர் வாழ கடலின் விடமுண்ட
சூலம் ,மழுவாள் தீ,மான் ஏந்தும் துய்யன் பதியென்பர்
நீல வண்டு தேனார் பொழில்சூழ் கோல ஆத்தூரே....2

பழிசேர் வினையால் விளையும் துன்பப் பாட்டை விடுவிப்பான்
இழிவான் நதியை சடையில் வாகாய் ஏற்ற சிவநாதன்
விழிஆர் நீரோ டுருகும் நெஞ்சில் மிளிர்வான் பதியென்பார்
சுழிநீர்ப் பொருநைத் தென்பால் பொழில்சூழ் எழிலார் ஆத்தூரே....3

 சிரமும் கலனாய் ஏந்தி பலிக்குத் திரியும் மதிசூடி
அரவும் நதியும் சடைமேல் திகழ அணிந்து மலர்கோத்தச்
சரமும் சூடி எளியர்க் கருள்செய் தலைவன் பதியென்பர்
இரவும் பகலும் ஏத்தும் அன்பர் விரவும் ஆத்தூரே....4

ஈம எரியில் ஆடல் புரியும் ஈடில் தழலாடி
நாமம் சொல்லத் தேனாய் இனிக்கும் நாளும் தொழுதுய்ய
சேம நிதியாய் நின்று காக்கும் தேவன் பதியென்பர்
பூமன் .னெழிலார் பொழில்கள் புடைசூழ் காமர் ஆத்தூரே....5













No comments: