மெய்யும் பொய்யும் எதுவென் றறியோமே
...விமலா! நீயே அவையென் றறியோமே
வெய்ய புலியின் தோலை உடையானே
...விரும்பும் அடியார் உள்ள முடையானே
உய்யும் வழியைக் காட்டும் கழலோனே
...உமையா ளுடனே நடம்செய் கழலோனே
துய்ய அன்பு மனத்துள் அமர்வோனே
...துணையே திருவா னைக்கா அமர்வோனே! ....8
வயசு கோளாறு
2 years ago
No comments:
Post a Comment