அருளால் சடையில் ஏற்றாய் ஆற்றினையே
...அகலா அன்பர் துன்பை ஆற்றினையே
தருஆல் நிழலில் மோன குருவென்றாய்
...தகப்பன் சாமி யுமுன் குருவென்றாய்
திருவாய்ப் பொலியும் தில்லை மன்றாடி
...சிவனுன் அருளே வேட்பர் மன்றாடி
புரைதீர் வெண்ணீ றணியும் மெய்யானே
...பொழில்சூழ் திருவா னைக்கா மெய்யானே! ...2
வயசு கோளாறு
2 years ago
No comments:
Post a Comment